Wednesday, April 18, 2012
Wednesday, April 4, 2012
Wednesday, March 7, 2012
Monday, March 5, 2012
"சமத்துவம்"
நிலமும்,வளமும்,கல்வியும்,அதிகாரமும் என்று தாழ்த்தப்பட்ட
மக்களுக்கும் கிடைக்கிறதோ அன்றுதான் சமத்துவம் முழுமை பெறும்.
நிலம்......பொருளாதாரம் கொடுக்கக்கூடியது மட்டுமல்ல. அது அங்கீகாரத்தை உறுதிபடுத்தும் கருவி.ஆகையால்தான் துனி மண் ஆயினும் சுதந்திரம் வேண்டும் என்கிற கோட்பாட்டினை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
நிலத்தை ஆதிக்கம் செய்த மிராசுதாரர்கள்,நிலக்கிழார்கள்,
அம்பலக்காரர்கள் சாதிய ஆதிக்கத்தையும் தூக்கிப்பிடித்தனர்.
நிலத்தை உழுதவர்கள்,பாதுகாத்தவர்கள் "கூறுகள்" என்றும் "அடிமைகள்" என்றும் "சாதிய வரலாறு" அடையாளப்படுத்துகிறது.
,.......புத்தகத்தில் படித்தது,,,....................
Thursday, March 1, 2012
குடும்பம்,தனிச்சொத்து,அரசு - எங்கெல்ஸ்
குடு்ம்பம்
குடும்பத்திற்கு ஆண் தலைவர்
பெண் வீட்டு வேலைகளும் மகப்பேறு தொடர்பான அனைத்திற்கும் பொறுப்பு.மரபுரீதியாக எழுதப்படாத சட்டமாக பாலினப் பாகுபாட்டை நிலைநிறுத்தி வந்திருப்பதோடு,தலைமுறை தலைமுறையாக இக்கருத்துக்களைப் பின்வரும் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லுகிற வலிமையான ஊடகமாகவும் குடும்பம் திகழ்கிறது.
இக்குடும்ப அமைப்பு தனிச் சொத்துரிமையின் பாதுகாவல் பொறுப்பையும் நிறைவேற்றி வந்துள்ளது.
தொடக்கால மனிதர்கள்,குலங்கள்,குலக் குழுக்கள்,கணங்கள்,இவ்வமைப்புகளினூடாக நிலவிய குடும்ப உறவுகள்,குழு மணங்கள்,குலங்களுக்கிடையிலான உறவுகளும் போர்களும் தனிச்சொத்தின் உதயம்,குலங்களுக்கிடையிலான சண்டைகள், அரசு என்ற புதிய சமுதாய அமைப்பின் தோற்றம் வரை நெடிது பயணித்த ஓர் ஆழமான ஆய்வைக் கொண்டது, எங்கெல்சின் குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலின் வரிகள்.
Subscribe to:
Posts (Atom)